முக்கிய செய்தி இந்தியா சென்ட்ரல் பேங்க், ஐ.ஓ.பி. வங்கிகள் தனியார் மயமா?: 2 வங்கி பங்குகளை ரூ.44,000 கோடிக்கு விற்க திட்டம்..ஒன்றிய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை என தகவல்..!! Jun 07, 2021 மத்திய வங்கி வங்கிகள் டெல்லி: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியர் ஓவர்சிஸ் பேங்க் ஆகிய வங்கிகளை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது தொடர்பான அறிவிப்பை பட்ஜெட்டின் போது ஒன்றிய அரசு அறிவித்தது. அப்போது பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்ட போவதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படுத்துவது தொடர்பான அறிவிக்கையை நிதி ஆயோக் அமைப்பு ஒன்றிய அரசிடம் அளித்துள்ளது. அதன் அறிக்கையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியர் ஓவர்சிஸ் வங்கி ஆகிய இரு வங்கிகளும் முதன்மை பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு வங்கிகள் மதிப்பு சுமார் ரூ.44,000 கோடி ஆகும். இதில் இந்தியர் ஓவர்சிஸ் வங்கியின் சந்தை முதலீடு மட்டும் 31,641 கோடி என கூறப்படுகிறது. இந்த இரு வங்கிகள் மட்டுமின்றி மஹாராஷ்டிரா வங்கியும் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா 2ம் அலை காரணமாக இதற்கான நடவடிக்கைகள் தாமதமானாலும் வங்கிகளை தனியாரிடம் வழங்குவதில் ஒன்றிய அரசு உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? :பாலச்சந்திரன் சொல்வது என்ன ?
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!!
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!
ஜூன் 2வது வாரம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?: துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும் என தகவல்..!!
சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்: மெட்ரோ நிர்வாகம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை; 80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி..பள்ளிக்கல்வித்துறை அசத்தல்..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் கைது
தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி ஐகோர்ட்
வரும் 25 நாட்கள் வெயில் கொளுத்தும்: நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் தொடக்கம்.! வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?… ராகுல் காந்தி சரமாரி கேள்வி
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்