புதுடெல்லி: சர்ச்சைக்குரிய லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை திரும்ப பெறக்கோரி, பிரதமர் மோடிக்கு முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 93 பேர் கடிதம் எழுதி உள்ளனர். இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு இயற்கை அழகை கொண்டுள்ளது. இங்கு சுற்றுலாத் துறை மற்றும் மீன்பிடி தொழில் முதுகெலும்பாக உள்ளது. அமைதியின் பிறப்பிடம் என்று அழைக்கப்படும் லட்சத்தீவில், மத்திய அரசால் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரியால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மாட்டிறைச்சிக்கு தடை, பள்ளிகளில் அசைவ உணவுக்கு தடை, மதுபான விற்பனைக்கு அனுமதி என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இவை பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. அவரை உடனடியாக திரும்ப பெறும்படி சட்டப்பேரவையில் கேரள அரசு தீர்மானம் கூட நிறைவேற்றி உள்ளது.