புதுடெல்லி: பங்கு சந்தையில் போலி முகவரி கொடுத்து வர்த்தகம் செய்த 50 நிறுவனங்கள், கிடைத்த பணத்தை சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தன. இந்தியாவில் வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு, விஜய் மல்லையா, நீரவ் மோடி உட்பட ஏராளமான பிரபல தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில்், கம்பெனி தொடங்கிய சில ஆண்டில் மும்பை பங்கு சந்தையில் கோடி கோடியாக பணத்தை திரட்டிக் கொண்டு 50 நிறுவனங்கள் ஓட்டம் பிடித்துள்ளன. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பங்கு சந்தையில் தற்போது 1,500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இந்த வர்த்தகம் செய்ய, நிறுவனங்கள் தகுந்த ஆவணங்களுடன் பதிவு செய்தபின் அனுமதிக்கப்படுகின்றன.