கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். 10க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை தற்போது மியூகோர்மைகோசிஸ் எனும் அரியவகை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. குறிப்பாக ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் எளிதில் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பெண் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.