முக்கிய செய்தி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை: ஓபிஎஸ் பங்கேற்கவில்லை Jun 04, 2021 மாவட்ட செயலாளர் எடப்பாடி பழனிசாமி 9 தீவிர தலைமை அலுவலகம் OPS சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமி, சேலத்தில் இருந்து நேற்று தான் சென்னை திரும்பினார். இன்று, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, பெஞ்சமின் மற்றும் திநகர் சத்யா, விருகை ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பது, அதற்கு நன்றி சொல்வது மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதுவது உள்ளிட்ட விவகாரங்களில் இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியானது. அதற்கு முன்னர், இருவரது பெயரிலும் தான் அறிக்கை வெளியாகும். மேலும், சில நாட்களாக, அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசுவது போன்ற ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்பு!
குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது
தேர்தலில் பண வினியோக பிரச்னை; போஸ்டர் யுத்தம், ேபாலீசில் எப்ஐஆர் புகார் விஸ்வரூபம்; அண்ணாமலை தலைமையிலான நாளைய பாஜ கூட்டம் திடீர் ரத்து: நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி
கனடாவில் நடந்த போட்டியில் வரலாறு படைத்த செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்
புயல், வெள்ள நிவாரணத்துக்கு கேட்டதோ ரூ.38,000 கோடி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியதோ ரூ.276 கோடி: தேர்தல் நடக்கும் கர்நாடகத்துக்கு ரூ.3454 கோடி ஒதுக்கீடு; ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை என முதல்வர், கட்சி தலைவர்கள் கண்டனம்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்
மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று மாலை அறிவிக்கிறது
தினகரன்-சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் சார்பில் அரங்குகள் அமைப்பு