மேற்கு சைதாப்பேட்டை மயான பூமி மூடல்

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக மேற்கு சைதாப்பேட்டை மயானபூமி இன்று முதல் 14ம் தேதி வரை இயங்காது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139க்கு உட்பட்ட மேற்கு சைதாப்பேட்டை மயானபூமியின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் 14ம் தேதி வரை இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் இன்று முதல் 14ம் தேதி வரை பொதுமக்கள் அருகிலுள்ள கண்ணம்மாபேட்டை அல்லது நெசப்பாக்கம் மயானபூமிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: