முக்கிய செய்தி சென்னை குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..விவசாயிகள் மகிழ்ச்சி..!! Jun 03, 2021 மேட்டூர் அணை அமைச்சர் கி.மு. கே. ஸ்டாலின் சென்னை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி நீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை வரும் 12ம் தேதி திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நேற்றைய தினம் விவசாயிகள் கோரிக்கை விடுந்த்திருந்தனர். தஞ்சையில் ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட விவசாயிகள், தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். வருகின்ற 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணை திறக்கப்படுவதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை செல்லும் வகையில் கால்வாய்களை தூர்வார ரூ.65 கோடியில் பணி நடக்கிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.13 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 61.43 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அணை திறப்பின் மூலம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பயன் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்
மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று மாலை அறிவிக்கிறது
தினகரன்-சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் சார்பில் அரங்குகள் அமைப்பு
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவு
ரூ.63,000 கோடி சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.1 கூட தராத ஒன்றிய அரசு.. மாநில நிதியில் செலவீனங்களை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசு!!
திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!: சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தினகரன் நாளிதழும், விஐடியும் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி!!