தரங்கம்பாடி : பொறையார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.முகாமிற்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்துக் கழக நாகை மண்டல பொதுமேலாளர் மாரியப்பன், நாகை கோட்ட மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். செம்பனார்கோவில் வட்டார ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கார்த்திக்சந்திரகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் 100 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.