சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடிதம்: வேலைவாய்ப்புக்காகவும் கல்வி மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களின் தலைமையிலான அரசு சிறப்பான முறையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்திய 18 முதல் 45 வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்களில் வெளிநாடு வேலைவாய்ப்பிற்காகவும், உயர் கல்விக்காகவும் செல்வோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களின் தடுப்பூசி சான்றிதழில் சம்பந்தப்பட்ட நபர்களின் பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறோம்.