குளச்சல்: குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அம்மன் புற்றுவடிவில் காட்சி தருகிறார். தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது இல்லை. தினசரி பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு நடை சாத்தப்படும். இந்நிலையில் இன்று காலையில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு வழக்கமான தீபாராதனை முடிந்து பூஜாரிகள் வெளியே வந்தனர். கோயிலுக்கு ஏதேனும் பக்தர்கள் வருகை தந்தாலும் அவர்கள் வெளியே சாலையில் நின்று அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். அந்த வகையில் காலை 7 மணியளவில் வெளியே சாலையில் நின்றவாறு பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்துள்ளார்.