டெல்லி: 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் அலையை விட கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை எற்படுத்திவருகிறது. இதனால், கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படாமல் உள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா வேண்டாமா என மத்திய அரசு ஆலோசித்துவந்தது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தவுடன் ஜூலை மாதம் தேர்வுகளை நடத்த கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கினர்.