முக்கிய செய்தி சென்னை தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ், எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது: தொடக்க கல்வி இயக்குநர் Jun 01, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் ஆரம்பக்கல்வி பணிப்பாளர் சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது, எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றகூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுமைக்குட்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது. மேற்படி பள்ளிகளின் 1ம் முதல் 8ம் வகுப்பு பயின்ற மாணவர்களின் அனைவரும் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளித் தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்க தேவையான அறிவுரைகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் எடுக்க தேவையான அறிவுரைகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைச் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிக்கையாக அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தளர்வில்லா ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. எனவே தளர்வில்லா ஊரடங்கு முடிவிற்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். மேலும் மாணவர்களுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் பள்ளிகள் திறந்தவுடன் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை: கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை; சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,880க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்களவை தேர்தல்: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 14ம் தேதி வேட்புமனு தாக்கல்.! 13ம் தேதி வாகன பேரணியும் நடத்துகிறார்
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 94.56% பேர் தேர்ச்சி.! அரசு பள்ளிகளில் 91.32% மாணவர்கள் தேர்ச்சி
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்: வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைது
93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு