சென்னை: குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறையின் முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிகர், சமூகநல ஆணையர் ஆபிரகாம், சமூகப்பாதுகாப்புத் துறை ஆணையர் வே.லாவ்வேனா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் கவிதா ராமு மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அனைத்து மாவட்ட சமூக நல அதிகாரிகள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சைல்டு லைன் அலுவலர்கள் உடன் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை மேற்கொண்டார்.