சென்னை: மும்பையிலிருந்து 2 லட்சம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள் மும்பையிலிருந்து விமானத்தில் சென்னை வந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் சென்னையில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தளா்வுகளற்ற முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதோடு தடுப்பூசிகள் போடுவதை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் தடுப்பூசிகள் சிறப்பு முகாம்கள்,மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களுடைய இருப்பிடங்களுக்கே நேரில் சென்று தடுப்பூசிகள் போடுதல் போன்றவைகளிலும் தமிழக அரசு ஈடுப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை முழுமையாக வழங்காமல் குறைவாகவே வழங்குகிறது.