முக்கிய செய்தி இந்தியா ஒரே நாளில் ஆயிரத்துக்கு மேலாக தீயாய் பரவும் கருப்பு பூஞ்சை நோய்; கர்நாடகாவில் 1250 பேர் பாதிப்பு: பொதுமக்கள் பீதி May 31, 2021 கர்நாடக கர்நாடகா: கர்நாடகாவில் ஒரே நாளில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு நகர பகுதி அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் 521 பேர் நோய் பாதிப்புக்கு ஆளான நிலையில், 508 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 18 பேர் குணமடைந்துள்ள நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 8,800க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் பாதிப்பு காணப்படுகிறது. ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது. கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது.
ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடப்பதால் 57 தொகுதியில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: மோடி உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரை, பூங்கா செல்வோரை வெளியேற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசா மாநிலத்தை ஆள வேண்டுமா? ஒடிசாவை சேர்ந்த இளம் முதல்வரை பிரதமர் மோடி உங்களுக்கு வழங்குவார்: அமித்ஷா பேச்சு
மக்களவைத் தேர்தலை ஒட்டி ரூ.9,000 கோடி மதிப்புள்ள பணம், தங்க நகைகள், போதைப் பொருள் உள்ளிட்டவை பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
சென்னையில் சாலை தடுப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தும் பணி தொடங்கியுள்ளது: சென்னை மாநகர காவல்துறை தகவல்
போக்சோ வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர் ராகுல், கெஜ்ரிவாலை புகழ்ந்தது ‘வெரி சீரியஸ் மேட்டர்’: விசாரணை நடத்த பிரதமர் மோடி கோரிக்கை
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜாமினை நீட்டிக்கக் கோரிய கெஜ்ரிவால் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: தலைமை நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தல்
ரேஷன் கடைகளில் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் மக்கள் பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு தகவல்
பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்: உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது எனவும் ஆறுதல்