முக்கிய செய்தி இந்தியா லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் படேல்லை திரும்ப பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!! May 31, 2021 லட்சத்தீவு நிர்வாக அலுவலர் பிரபுல் படேல் கேரள சட்டமன்றம் திருவனந்தபுரம்: லட்சத்தீவு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் நிர்வாக அதிகாரி பிரபுல் படேல்லை உடனடியாக மத்திய அரசு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. லட்சத்தீவு நிர்வாக அதிகாரியாக குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் பிரபுல் படேல் நியமிக்கப்பட்டதை அடுத்து அவரது நடவடிக்கைகள் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது, அங்கு வழக்கத்தில் இல்லாத மது விற்பனையை அறிமுகப்படுத்தியது என்று பிரபுல் படேலின் செயற்பாட்டிற்கு கேரள மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், லட்சத்தீவு தொடர்பான தீர்மானத்தை கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் முன்மொழிந்தார். அப்போது லட்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் லட்சத்தீவில் வசிக்கும் மக்களின் உணர்வுகளை பாதுகாப்பது மத்திய அரசின் கடமை என்றும் பினராயி விஜயன் கோரிக்கைவிடுத்தார். மேலும் மக்களின் உணர்வுகளை மதிக்காத நிர்வாக அதிகாரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். லட்சத்தீவு மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் முன்மொழிந்த தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணர்வுகளை காக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்