முக்கிய செய்தி தமிழகம் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு சீல் : ஆட்சியர் அதிரடி உத்தரவு May 30, 2021 ஈரோடு மாவட்டம் ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காத நிலையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்றும் புதிதாக 1,743 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 144 ஆக உயர்ந்தது. இதில் 38 ஆயிரத்து 426 பேர் குணமடைந்து உள்ளார்கள். நேற்று மட்டும் 1,301 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டார்கள். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 14 ஆயிரத்து 400 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மாநில அளவில் சற்று தொற்று பரவல் குறைய தொடங்கி இருக்கிறது. அதேசமயம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி ஐகோர்ட்
வரும் 25 நாட்கள் வெயில் கொளுத்தும்: நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் தொடக்கம்.! வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?… ராகுல் காந்தி சரமாரி கேள்வி
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்
விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல்
ஏற்காடு பஸ் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு: குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை
ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம்: ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு.! ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடக்கம்: தமிழக அரசு தகவல்
சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
தொழிலாளர் தினத்தில் மகிழ்ச்சி செய்தி..! சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 19 குறைந்து ரூ.1911க்கு விற்பனை