சென்னை பொறியியல் மாணவர்களுக்கு கொரோனாவுக்கு முந்தைய காலங்களை போலவே நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும்!: அண்ணா பல்கலை. அறிவிப்பு..!! May 29, 2021 கொரோனா அண்ணா பல்கலைக்கழகம் சென்னை: பொறியியல் மாணவர்களுக்கு கொரோனாவுக்கு முந்தைய காலங்களை போலவே நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வு கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்றது. ஆன்லைன் முறையில் நடைபெற்ற தேர்வில், 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் தோல்வி அடைந்ததாக கூறி, ஆயிரக்கணக்கான மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதையடுத்து செமஸ்டர் தேர்வை மீண்டும் நடத்த மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. இதுகுறித்து ஆலோசனை நடத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மீண்டும் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார். மீண்டும் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, கடந்த 24ம் தேதி முதல் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ஆன்லைனில் நடைபெற்ற தேர்வு மீண்டும் நேரடி எழுத்து தேர்வாக 3 மணி நேரம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களின் பட்டியலை வருகின்ற 7ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் நேரடி எழுத்து தேர்வே நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்
சித்திரை மாத பிரமோற்சவ விழா திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்: வடம் பிடித்து பக்தர்கள் தேர் இழுத்தனர்
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்: குடிநீர் வாரியம் தகவல்
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி