சென்னை: தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எத்தனை பேர் என்று நாள் தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும். தகவல்களை தர மறுக்கும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து வெளியிட்ட அரசாணை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் அல்லது கோவிட் தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்த தகவல்களை நாள்தோறும் கீழ்க்காணும் அட்டவணையின்படி gccpvthospitalreports@chennaicorporation.gov.in எஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.