செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்

சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையில் உற்பத்தி தொடங்குவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழக அரசுக்கு குத்தகைக்கு ஆலையை வழங்கினால் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு குத்தகைக்கு அளித்தால் உடனடியாக தயாரிப்பு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

ஆலையை நடத்துவதற்கான தனியார் நிறுவனத்தை மாநில அரசு கண்டறிந்து உடனடியாக தடுப்பூசி உற்பத்தியை தொடங்கும். செங்கல்பட்டு ஆலையை இயக்கினால் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறன் அதிகரிக்கும். இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories: