முக்கிய செய்தி உலகம் தடுப்பூசி வாங்க முடியாமல் தவிக்கும் ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் நன்கொடை!: ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் மாநாட்டில் முடிவு..!! May 26, 2021 ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரஸ்சல்ஸ்!: தடுப்பூசி வாங்க முடியாமல் தவிக்கும் ஏழை நாடுகளுக்கு சுமார் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்படும் என்று 27 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பு உறுதி அளித்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களின் 2 நாள் மாநாடு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 27 நாடுகளின் தலைவர்கள், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது, வானிலை மாற்றம், பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் விவாதித்தார்கள். உலக அளவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்புகளை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. அப்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலும் பொருளாதார வீழ்ச்சியால் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் முடிவு செய்துள்ளார்கள். இதற்காகவே ஐ.நா. அமைத்துள்ள கோவாக்ஸ் அமைப்புடன் ஒருங்கிணைந்து தடுப்பூசிகளை கட்டணமின்றி விநியோகிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக இந்த ஆண்டின் இறுதிக்குள் படிப்படியாக சுமார் 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை சொந்த நாட்டில் தயாரிக்க விரும்பும் ஏழை நாடுகளுக்கு ரீதியில் உதவி செய்யவும் ஐரோப்பிய யூனியன் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
குஜராத் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 2 மாஜி முதல்வர்கள், 2 ஒன்றிய அமைச்சர்கள் எதிர்காலம் என்னாகும்?
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என் மீது ஒரு ஊழல் புகார் கூட எழுந்ததில்லை: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
கர்நாடகத்தை உலுக்கும் ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஒன்றிய அரசு காப்பாற்றுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்