புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கு பரோல் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க உத்தரவிட்டுள்ளது. சிறைகளில் கொரோனா பரவலை தடுக்க தகுதிவாய்ந்த கைதிகளுக்கு 90 நாள் பரோல் வழங்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் தமக்கு பரோல் வழங்கக் கோரி இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.