முக்கிய செய்தி சென்னை பயணிகள் வரத்து குறைவு; மேலும் 6 சிறப்பு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு May 25, 2021 தெற்கு ரயில்வே சென்னை: பயணிகள் வரத்து குறைவு காரணமாக மேலும் 6 சிறப்பு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறித்துள்ளது. சென்னை எழும்பூர்-திருச்சி, மதுரை உள்பட 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவில்-கோவை-நாகர்கோவில் (வண்டி எண்: 06321/06322), சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-கோவை-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (02679/02680), சென்னை எழும்பூர்-திருச்சி-சென்னை எழும்பூர் (06795/06796), கோவை - மங்களூரு-கோவை (06323/06324), சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-கே.எஸ்.ஆர் பெங்களூரு-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (06075/06076) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-மதுரை-சென்னை எழும்பூர் (02613/02614) சிறப்பு ரெயில்கள் ஜூன் மாதம்15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே சில ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆகவே பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். ஆகவே ரயிலில் போதிய பயணிகள் இல்லாததால் 6 ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்