தமிழகம் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!: கொரோனா நோயாளியுடன் காத்திருந்த 108 ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்தது..!! May 22, 2021 கோவி அரசு மருத்துவமனை கோவை: கோவையில் கொரோனா நோயாளியுடன் காத்திருந்த 108 ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது. அதிர்ஷ்டவசமாக நோயாளி உயிருடன் மீட்கப்பட்டார். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர், மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை மாற்றியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ்களில் இருந்த 2 சிலிண்டர்களில் ஒன்று வெடித்து சிதறி கொளுந்துவிட்டு எரிந்தது. மருத்துவமனைகளில் இருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தீ பலஅடி உயரத்திற்கு கொளுந்துவிட்டு எரிந்ததால் அங்கு பரபரப்பு எழுந்தது. நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், அரைமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆம்புலன்சில் இருந்த கொரோனா நோயாளியும் உயிருடன் மீட்கப்பட்டார். ஆம்புலன்ஸ் பற்றி எறிந்த இடத்திற்கு அருகே கொரோனா நோயாளிகள் வார்டு இருந்த நிலையில், உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், உடனடியாக அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட முறையில் மட்டுமே கட்டணங்களை செலுத்த வேண்டும்: நுகர்வோருக்கு குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மன் கொடுத்தும் ஆஜராகாதவர் விமான நிலையத்தில் சிக்கினார்: தனிப்படை போலீசார் விசாரணை
கோயிலில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட பெண் தர்மகர்த்தாவுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்: அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு
விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்க முடிவு தமிழக மகிளா காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு: மாநில தலைவி ஹசீனா சையத் அறிவிப்பு
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா? பத்திரிகையில் வரும் செய்திகளே போதுமானது: எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேரில் ஆய்வு 600 தூய்மைப்பணியாளர்களுக்கு பிரியாணியுடன் மதிய விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிமாறி அமர்ந்து சாப்பிட்டார்
கவரப்பேட்டை ரயில் விபத்து தண்டவாளத்தில் நட்டு, போல்டு கழற்றப்பட்டதே விபத்துக்கு காரணம்: சதி செயலா? என ரயில்வே போலீசார் விசாரணை
ரூ.1500 கோடியில் நவீனமாகும் ஹூண்டாய் தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பம்