ராமநாதபுரத்தில் 82 போலீசாருக்கு கொரோனா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் 72 போலீசாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து  அனைத்து போலீசாருக்கும் சோதனை நடத்த எஸ்பி கார்த்திக் உத்தரவிட்டார். இதன்படி கடந்த 2 தினங்களாக அனைத்து போலீசாருக்கும் மேற்கொண்ட சோதனையில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை ஒரு கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர்கள், 3 எஸ்ஐ.கள், 8 சிறப்பு எஸ்ஐ.கள் என 82 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகள், வீடுகளில் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.

Related Stories: