சேலம்: சேலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: சேலத்தில் ஆக்சிஜன் பயன்பாட்டை தவறாக கையாண்டதால், 2 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் அரசிடம் நேரடியாக ரெம்டெசிவிர் மருந்துகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாறாக நோயாளிகளை வாங்கி வர கட்டாயப்படுத்தினால், உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். 98 சதவீத தனியார் மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஒருசில மருத்துவமனைகளால் தவறுகள் நடக்கிறது.