முக்கிய செய்தி இந்தியா 2021 இறுதிக்குள் 216 கோடி தடுப்பூசி உற்பத்தி சாத்தியமா?!: மத்திய அரசின் இலக்கு மீது சந்தேகம் எழுப்பும் உற்பத்தியாளர்கள்..!! May 19, 2021 டெல்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் 216 கோடி கொரோனா தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியிருப்பது சாத்தியமாகுமா என்று தடுப்பூசி உற்பத்தி நிறுவன அதிகாரிகளே கேள்வி எழுப்பியுள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிக்கு சுமார் 200 கோடி தடுப்பூசி தேவைப்படும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 216 கோடி தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தியாகும் என்று மத்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறியிருந்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு வியப்பை ஏற்படுத்துவதாக தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரேசீராக மூலப்பொருட்கள் கிடைத்து தொய்வின்றி உற்பத்தி நடைபெற்றால் கூட இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 100 கோடி தடுப்பூசி மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். தற்போது மாதத்திற்கு 7 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம், கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்தால் ஜூலை மாதத்திற்கு பிறகு மாதம் 10 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும். அவ்வாறு நடைபெற்றால் கூட 50 கோடி தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கும். இதேபோல் தற்போது மாதம் கோவாக்சின் 1 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம், ஆகஸ்ட் மாதம் முதல் 7 கோடி தடுப்பூசிகளையும் செப்டம்பர் மாதம் முதல் 10 கோடி தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யவுள்ளது. இதன் மூலம் 47 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்த 2 தடுப்பூசிகள் மொத்த உற்பத்தி மத்திய அரசின் எதிர்பார்ப்பில் பாதி அளவு கூட இல்லாததால் இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடுவது சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்