சென்னை: கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உட்பட தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அரசு கட்டுப்பாடுகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுவோர் மீது வழக்கு பதிந்து அவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 6 நாட்களாகவே கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த 12ம் தேதி 7,564 ஆயிரத்திற்கும் மேல் சென்ற பாதிப்பு எண்ணிக்கை 13ம் தேதி முதல் 7 ஆயிரத்திற்கும் கீழ் குறைய துவங்கியது. அதன்படி நேற்று முன்தினம் 6,150 ஆக இருந்த பரவல் நேற்று சென்னையில் 6,016 ஆக குறைந்துள்ளது.