வேளச்சேரி: பள்ளிக்கரணை விஜிபி சாந்தி நகரை சேர்ந்தவர் காஜா நிஜாமுதீன் (38). நுங்கம்பாக்கத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று காலை, அப்பகுதியில் உள்ள கடைக்கு காரில் சென்று, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினார். பின்னர், அங்கிருந்து வஉசி நகர் மெயின் ரோடு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதில், காரின் இன்ஜினில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.