சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் ரோட்டில் ‘பால விகார்’ என்ற பெயரில் பள்ளி உள்ளது. இங்கு ஆதரவற்ற மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயின்று வருகிறார்கள். விடுதி வசதியும் உள்ளது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி சென்னை பெருநகர சுகாதாரத்துறை ஊழியர்கள், இப்பள்ளியில் பயிலும் 175 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சோதனை செய்தனர். நேற்று முன்தினம் அதன் முடிவு வெளியானது.