முக்கிய செய்தி இந்தியா கடந்த 2 வாரங்களாக திருப்பதியில் தினசரி 3 ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் தரிசனம் : ரூ.27 லட்சம் உண்டியல் வசூல் May 18, 2021 திருமலை: இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளதால் திருமலை மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. ஆன்லைன் மூலம் விரைவு தரிசனம், வி.ஐ.பி. பிரேக், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வி.ஐ.பி. பிரேக் டிக்கெட், நன்கொடையாளர்கள் என தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களின் வருகை குறைவாக உள்ளதால் வைகுண்டம் காத்திருப்பு அறை மூலமாக இல்லாமல் மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வரிசை வழியாக தேவஸ்தானம் பக்தர்களை அனுமதித்து வருகிறது. அதனால் பக்தர்கள் 15 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசித்து திரும்புகின்றனர். அலிபிரி பாதயாத்திரை மார்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மார்க்கம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது. தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கொரோனா விதிமுறைகள் காரணமாக தரிசனத்துக்கு வர இயலாத சூழ்நிலையில் தரிசன தினத்திலிருந்து 90 நாட்களுக்குள் வழிபாடு செய்து கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி உள்ளது. கடந்த 2 வாரங்களாக தினசரி 3 ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் தரிசனத்தில் வந்த நிலையில் சனிக்கிழமை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 5,081 பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று 4,587 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.27 லட்சம் உண்டியல் வசூலானது.
அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ1000: தமிழக அரசு அறிவிப்பு
ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு
இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; பாஜகவின் பொய் பேச்சால் சோர்ந்து போயுள்ளனர்: பிரியங்கா காந்தி பேட்டி
ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்: பிரதமர் நரேந்திர மோடி காட்டம்
தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மே 11ம் தேதி வரை 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங்கின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பிவைப்பு; தீவிரமாகும் விசாரணை
126-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10-ல் நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரம்; பி.பி. ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவு..!!
தமிழ்நாட்டில் ஏப்.30-ம் தேதி வரை 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு
சிக்னல் கோளாறால் மின்சார ரயில்கள் தாமதம்!: சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே பயணிகள் மறியல் போராட்டம்..!!
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு!: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு..!!
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக மாநில பொருளாளரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் முடிவு..!!