சென்னை சீனாவில் இருந்து கிரையோஜெனிக் ஆக்சிஜன் கண்டெய்னர்கள் இறக்குமதி!: இம்மாத இறுதிக்குள் தமிழகம் வந்தடையும்..அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி..!! May 18, 2021 சீனா தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அமைச்சர் தங்க தெற்கு சென்னை: தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜனை எளிதில் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக சீனாவில் இருந்து கிரையோஜெனிக் ஆக்சிஜன் கண்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சன் செய்திகளுக்கு பிரத்யோக பேட்டி அளித்த அவர், சீனாவில் 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 கிரையோஜெனிக் கண்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். இம்மாத இறுதிக்குள் அவை தமிழகம் வந்தடையும் எனவும் கூறினார். மேலும் இந்த கிரையோஜெனிக் கண்டெய்னர்களின் நேரடி இறக்குமதி தமிழகத்திற்கு மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேட்டியில் குறிப்பிட்டதாவது, திரவ பிராண வாயுவை கொண்டு வருவதற்காக கண்டெய்னர்கள் மிக முக்கிய தேவையாக உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி உறைநிலையில் இருக்கக்கூடிய கிரையோஜெனிக் கண்டெய்னர்கள் தேவையாக இருக்கிறது. அதற்காக சீனாவில் இருந்து 12 கொள்கலன்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்சிஜனை எளிதில் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையாக இந்த கண்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்