சென்னை ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா 2வது அலைக்கு இதுவரை 244 டாக்டர்கள் உயிரிழப்பு!: இந்திய மெடிக்கல் அசோசியேஷன் தகவல்..!! May 18, 2021 இந்திய மருத்துவக் கழகம் சென்னை: கொரோனா 2-வது அலைக்கு இதுவரை 244 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மெடிக்கல் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை இந்தியாவில் சூறாவளியாக அடித்து கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் கொரோனா தாக்கம் உயர்ந்துகொண்டே செல்கிறது. தற்போதைய நிலையில் தினந்தோறும் 4 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அபாய கட்டத்தில் இந்தியா உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததன் தொடக்கத்தில் இருந்தே அதனை விரட்டி அடிக்கும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கொரோனா கொல்லுயிரிக்கு இலக்காகி மருத்துவர்களும் உயிர்களை இழக்கும் துர்த்தாஷ்டவசமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா 2-வது அலைக்கு இதுவரை 244 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மெடிக்கல் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. இதில் நேற்று மட்டும் 50 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பீகாரில் அதிகபட்சமாக 69 மருத்துவர்களும், உத்திரப்பிரதேசத்தில் 34 மருத்துவர்களும், டெல்லியில் 27 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் இந்தியாவில் கொரோனா தொற்று தாக்கிய போது 736 மருத்துவர்கள் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றுக்கு சுமார் 1000 டாக்டர்கள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்