சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்த கலந்துரையாடலை கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் நடத்துவதே ஏற்புடையது என மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: கோவிட் நோய்த்தொற்று காலத்தில் கல்வி அமைப்பு மேலாண்மை, பள்ளிகளில் இணைய வழி கல்வி தொடர்வதற்கான வழிமுறைகள், புதிய தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துதலின் நிலை போன்றவை குறித்து மாநிலங்களின் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் இன்று கலந்துரையாட இருப்பதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.