சென்னை தீவிரமடையும் கொரோனா 2ம் அலை!: ஆக்சிஜனை தொடர்ந்து 10,000 காலி சிலிண்டர் வாங்க தமிழக அரசு நடவடிக்கை..!! May 16, 2021 கொரோனா தமிழ்நாடு அரசு சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையை சமாளிக்க 10,000 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்களில் இருந்தும் ஆக்சிஜன் கொண்டு வரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஒடிசாவில் இருந்து தமிழகத்திற்கு தங்கு தடையின்றி ஆக்சிஜனை கொண்டு வருவதற்காக ஒரியா மற்றும் இந்தி தெரிந்த 2 கண்காணிப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. இதனிடையே காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்வதிலும் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஜெர்மன், பிரிட்டனில் இருந்து 900 சிலிண்டர்களும், சிங்கப்பூரில் இருந்து 200 சிலிண்டர்களும் ஏற்கனவே தமிழகம் வந்தடைந்தன. இந்த நிலையில் மேலும் 10 ஆயிரம் காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்ய சிப்காட் மூலம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. குத்தகை முறையில் பயன்படுத்தப்பட்ட சிலிண்டர்களுக்கு மாதம் 500 வாடகையும், புதிய சிலிண்டர்களுக்கு 750 ரூபாய் வாடகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் டெண்டர் பெற்ற பின்னர், 7 நாட்களில் சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்