சென்னை போதிய கையிருப்பு உள்ளது!: பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்..!! May 16, 2021 ஆணையாளர் சென்னை மாநகராட்சி சென்னை: போதிய கையிருப்பு இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அத்யாவசிய தேவைகளின்றி வெளியே வருபவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போதிய கையிருப்பு உள்ளதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தியுள்ளார். எழும்பூர் தனியார் பள்ளியில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியவர்கள் பார்வையிட்டனர். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஆணையர் ககன்தீப் சிங், சென்னையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாகவும் சென்னையில் 40 சதவீதம் அளவுக்கு மட்டும் பொதுமக்கள் தடுப்பூசியைய் செலுத்தி உள்ளனர் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் சென்னையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையர் குறிப்பிட்டார்.
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்