பெங்களூரு: கர்நாடகா வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் சிலரும் கொரோனா இரண்டாவது தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதிவாசிகள், பழங்குடியின வகுப்பினர், நாடோடிகள், ஆடு மேய்ப்பவர்கள், தேன் எடுப்பவர்கள் ஆகியோர் மக்களுடன் சேர்ந்து வாழாமல் தனித்து வாழ்வதால் கொரோனா முதல் அலையில் பாதிப்பின்றி இருந்தனர். ஆனால் தற்போது மக்களை அலைக்கழித்து வரும் இரண்டாவது அலை ஆதிவாசிகளையும் விட்டு வைக்கவில்லை. கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் சோலிகரு மற்றும் குடகு மாவட்டத்தின் தேன்குருபர் வகுப்பினர் வாழும் பகுதியில் சிலருக்கு தொற்று பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் யாரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் உள்ளனர்.