சென்னை: அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது தற்போது புயலாக வலுப்பெற்று வருகிறது. இது வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று, இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.