சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்த பலருக்கு அவசிய, அவசர தேவையாக இன்று ஆக்சிஜன் இருக்கிறது. மருத்துவர்கள் கவனத்தோடு செயல்பட்டாலும் கூட ஆக்சிஜன் தேவையால் உயிர் சேதம் ஏற்படும் அச்சம் மக்களிடையே ஏற்பட்டு இருக்கிறது. இதனை போக்க கூடிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.