ஆக்சிஜன் உற்பத்தியை விரைவுப்படுத்த வேண்டும்: வாசன் வேண்டுகோள்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்த பலருக்கு அவசிய, அவசர தேவையாக இன்று ஆக்சிஜன் இருக்கிறது. மருத்துவர்கள் கவனத்தோடு செயல்பட்டாலும் கூட ஆக்சிஜன் தேவையால் உயிர் சேதம் ஏற்படும் அச்சம் மக்களிடையே  ஏற்பட்டு இருக்கிறது. இதனை போக்க கூடிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

எனவே மத்திய மாநில அரசுகள் ஒருபுறம் அரசின் சார்பில் ஆக்சிஜன் உற்பத்திக்கு எற்பாடு செய்தல் மிக முக்கியம் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சிஎஸ்ஆர் மூலம் ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ மத்திய, மாநில அரசுகள்  துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: