சென்னை: மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையத்தை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்த சிறப்பு வசதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 519 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.