ஸ்டான்லியில் மேலும் 10 டாக்டர்களுக்கு கொரோனா

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று மேலும் 10 மருத்துவர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்து வருவதால் அரசு மருத்துவமனைகளில்  நோயாளிகள் குவிந்து வருகின்றனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 1,850 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல்,  ஸ்டான்லி அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் செயல்படும் பாரதி மகளிர் கல்லூரியில் 200 படுக்கைகளும், ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 60 படுக்கைகளும், அத்திப்பட்டு கொரோனா சிகிச்சை மையத்தில் 450 படுக்கைகளும் என 2,560  படுக்கைகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வந்த தலைமை மருத்துவர்கள் உட்பட  10 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 10  மருத்துவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதையடுத்து அங்கு பணிபுரியும் செவிலியர்கள், துப்புரவு ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: