சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று மேலும் 10 மருத்துவர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 1,850 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஸ்டான்லி அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் செயல்படும் பாரதி மகளிர் கல்லூரியில் 200 படுக்கைகளும், ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 60 படுக்கைகளும், அத்திப்பட்டு கொரோனா சிகிச்சை மையத்தில் 450 படுக்கைகளும் என 2,560 படுக்கைகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.