டெல்லி: கொரோனா கோரத்தாண்டவத்தால் நாடு முழுவதும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி கண்களை திறந்து பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பெரும் இழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தடுப்பூசி போடும் திட்டமும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் நிலைமை திகிலூட்டும் வகையில் உள்ளன. படுக்கைகள் கிடைக்காத அளவிற்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருவதால், ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் இறந்து வருகின்றனர்.