சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆர்.சண்முக சுந்தரம், கடந்த 1996 – 2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக்காலத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார். சட்டம், கல்வி, சமூக அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் சண்முகசுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.