முக்கிய செய்தி இந்தியா கோவிஷீல்டு, கோவாக்சின் பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் - 5 இந்தியா வருகை May 07, 2021 ஸ்பூட்னிக் இந்தியா கோவ்ஷீல்ட் கோவாக்ஸ் டெல்லி: இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் - 5 தடுப்பூசிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ள நிலையில், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. அதேநேரம், ரஷ்யாவில் உற்பத்திசெய்யப்படும் ஸ்புட்னிக் - 5 தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே முதல் தொகுப்பாக 1,50,000 ஸ்புட்னிக் - 5 தடுப்பூசிகள் மே 1ம் தேதி இந்தியாவுக்கு அனுப்பியது. தற்போது இரண்டாம் தொகுப்பாக 1,50,000 தடுப்பூசிகளை அனுப்ப உள்ளதாகவும், அடுத்த சில தினங்களில் அந்த தடுப்பூசிகள் இந்தியா வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘மே மாத இறுதியில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் 3 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை அனுப்ப உள்ேளாம். ஜூன் மாதத்தில் 5 மில்லியன், ஜூலை மாதத்தில் 10 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் - 5 தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும். தடுப்பூசிகள் மட்டுமல்லாமல் 4 ஆக்சிஜன் உற்பத்தி டிரக்குகள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதேநேரம், ரஷ்யா ஸ்புட்னிக் - 5 தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக இருப்பதால், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி 79.4 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும். இந்த தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக ஒற்றை டோஸ் தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டது. தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா மற்றும் கானாவில் 7,000 பேருக்கு மூன்றாம் கட்ட பரிசோதனை நடக்கிறது. ரஷ்யா இதுவரை 8 மில்லியன் மக்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகாலையில் மிதமான மழை; தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்
என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்: சோனியா காந்தி கடும் விமர்சனம்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 வரை நீட்டிப்பு..!!
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை பரிந்துரை
5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின் பதவியேற்பு: அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை தொடங்கினார்!!
தேர்தலில் வெற்றி பெறப்போவது வாக்கு ஜிகாத்தா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் : பிரதமர் மோடி பரப்புரை
தமிழ்நாட்டில் தடையின்றி மின்விநியோகம்.. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
மதுபான கொள்கை ஊழல் வழக்கு; டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு
12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!!
கெஜ்ரிவால் டெல்லி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்.. குற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல : உச்சநீதிமன்றம்
அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஒவ்வொரு புள்ளியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் காட்டம்
மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000..விடியல் பேருந்து பயணம்; 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் அரசு: அமைச்சர் உதயநிதி புகழாரம்