முக்கிய செய்தி சென்னை மு.க.ஸ்டாலினின் முதல் அதிரடி!: தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்..!! May 07, 2021 கி.மு. கே. ஸ்டாலின் தலைமை மாநில செயலாளர் தமிழக சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்பு, 2019ம் ஆண்டு முதல் அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சி துறை தலைவராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து, தலைமை செயலாளராக அவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. ராஜீவ் ரஞ்சனுக்கு 3 மாத பதவிக்காலம் இருக்கக்கூடிய நிலையில், தலைமை செயலாளர் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் புதிய முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் தனி செயலாளர்களாக 4 பேர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போதுள்ள சூழலில் அரசு நிர்வாகம் துரிதமாகவும், விரைவாகவும் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு துறைகளில் இறையன்பு ஐ.ஏ.எஸ். செயல்பட்ட போது அத்துறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியவர் என்பது நினைவில்கூறத்தக்கது. இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி அனுபவம் கொண்டிருக்கும் இறையன்பு, லட்சக்கணக்கான இளைஞர்களின் ஊக்கசக்தியாக திகழ்ந்து வருகிறார். இளைஞர்களுக்கான தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகளையும் அவர் தொடர்ந்து எழுது வருகிறார் என்பது கவனிக்கத்தகக்து.
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஏப்.29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..!!
மக்களுக்கு ஓர் ஜில் அறிவிப்பு!: மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..பிரதீப்ஜான் கணிப்பு..!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி; மோர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை மக்களுக்கு வழங்கினார்..!!
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040க்கு விற்பனை.! பொதுமக்கள் அதிர்ச்சி
மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு!: குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!!
ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி; ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம்
2ம் கட்ட மக்களவை தேர்தல்; 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது: ராகுல், ஓம்பிர்லா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்
வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு, ராகுலின் பிரசாரம் குறித்து புகார், பா.ஜ – காங்கிரசுக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி, 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க கெடு
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது; 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: ராகுல், சசிதரூர், டி.கே.சுரேஷ் தொகுதிகளுக்கும் நடக்கிறது
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முகூர்த்த தினம், வார இறுதிநாளை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்