சென்னை பதவியேற்ற நாளிலேயே 5 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி!: ப.சிதம்பரம் May 07, 2021 முதல் அமைச்சர் எம்.கே. ஸ்டாலின் பி. சிதம்பரம் சென்னை: பதவியேற்ற நாளிலேயே 5 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கிண்டி ராஜ்பவனில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடந்தது. அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர். தொடர்ந்து, தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், முதல் கையெழுத்தாக அனைவரும் எதிர்பார்த்தபடி, கொரோனா நிவாரணத்தில் முதல் தவணையாக ரூ.2,000 இம்மாதமே வழங்கப்படும். இம்மாதம் 16ம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. நாளை முதல் அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் இலவச பயணம். மக்களின் புகார் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்க புதிய துறை. முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை அரசே ஏற்கும் உள்ளிட்ட 5 அறிவிப்புக்களை அதிரடியாக வெளியிட்டார். இந்நிலையில், பதவியேற்ற நாளிலேயே 5 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமையை சமாளிக்க சிறிது காலமாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார். தமிழக அரசின் நிதி நிலைமை சீராக இல்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்திருப்பார் என்று நம்புகிறேன். நிதிநிலைமையை சீரமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். நிதி நிலைமை சீராகும் போது தான் இன்னும் சில மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் எனவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்