சூரத்: மருத்துவமனை பில் கட்டாததால் கொரோனா நோயாளியின் சடலத்தை சாலையில் வீசிச் சென்ற குஜராத் டாக்டரை போலீசார் கைது செய்தனர். குஜராத்தின் சூரத் மாவட்டம் பம்ரோலி பகுதியில் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இதன் உரிமையாளர் டாக்டர் ஜிதேந்திரா படேல். இந்த மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன் தினம் இறந்தார். மருத்துவமனை பில் கட்டணத்தை முழுமையாக கட்டினால் மட்டுமே சடலத்தை தர முடியும் என டாக்டர் ஜிதேந்திரா, இறந்தவரின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.