இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் போதைக்காக ஹோமியோபதி மருந்து குடித்த 8 பேர் உயிரிழப்பு: போலீசார் தீவிர விசாரணை May 06, 2021 சத்திரேஸ்கர் சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் போதைக்காக ஹோமியோபதி மருந்து குடித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலஸ்பூர் மாவட்டம் கோர்மி கிராமத்தை சேர்ந்த சிலருக்கு நேற்று முன்தினம் இரவு முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களில் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும், 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அந்த விசாரணையில் போதைக்காக டோர்சிரா 30 என்ற ஹோமியோபதி மருந்தை அவர்கள் குடித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. போதைக்காக ஹோமியோபதி மருந்தை குடித்த அனைவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஹோமியோபதி மருந்தை போதைக்காக குடிக்க கொடுத்துவிட்டு 8 நபர்கள் உயிரிழக்க காரணமாக இருந்து தப்பிச்சென்ற ஹோமியோபதி மருத்துவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்
மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
பாலியல் புகாரில் வெளிநாட்டிற்கு ஓட்டம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்: சிபிஐ மூலம் நடவடிக்கை
மீண்டும் சர்ச்சை கிளப்பும் நேபாளம்; இந்திய பகுதிகளுடன் கூடிய வரைபடத்துடன் புதிய கரன்சி: வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது