கும்மிடிப்பூண்டி: மேற்கு வங்காளத்தில் ஆட்சியை தக்க வைத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவதாக கூறி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசை கண்டித்து கும்மிடிப்பூண்டியில் பாஜகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டியில் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக நிர்வாகி ஜம்புலிங்கம் தலைமை தாங்கினார்.