திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் மே 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. தற்போது கேரளாவில் நிலைமை மிக மோசமாக உள்ளது. ஒரே நாளில் மேலும் 41,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். பரிசோதனை பாசிட்டிவிட்டி சதவீதம் குறையவில்லை.எனவே நோய் பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.